ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். தியேட்டரில் ஓடி முடித்து விட்ட இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் பற்றி பேசினார் மாரி செல்வராஜ். அந்த தேவர் சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம் என அவர் கூறினார். அதனால் இந்த படத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட ரத்னவேல் வேடத்தில் நடித்த பஹத் பாசில் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அவரே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் அவருக்கு எல்லா சாதிக்காரர்களும் ஓட்டு போடுகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சாதி படத்தில் அவர் நடித்தது ரொம்ப தவறு என்று தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.