கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டு நேற்று முன்தினம் தான் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்றார் விஜய். இந்த நிலையில் வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அஜித்குமார் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுடன் அஜித்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
துணிவு படத்திற்கு பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கயிருப்பதால் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி இருக்கிறார் அஜித். அதனால் இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.