புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஏராளமான படங்களில் நடித்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு அன்பு, யுவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்து வரும் இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர்களின் மனைவிகள் இருவருமே அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும், தற்போது இந்த பிரச்சனை மேலும் பெரிதாகி இருவரின் மனைவிகளும் பிரிந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி நடிகர் அன்புவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛சிரித்துக் கொண்டே... அந்த மாதிரி ஒரு பிரச்னையும் இல்லை. பைத்தியகாரத்தனமாக உள்ளது. இவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏன் இவ்வளவு கேவலமாக யோசிக்கிறார்கள் என தெரியவில்லை'' என்றார்.
மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, திமுக துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.