மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஏராளமான படங்களில் நடித்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு அன்பு, யுவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்து வரும் இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர்களின் மனைவிகள் இருவருமே அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும், தற்போது இந்த பிரச்சனை மேலும் பெரிதாகி இருவரின் மனைவிகளும் பிரிந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி நடிகர் அன்புவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛சிரித்துக் கொண்டே... அந்த மாதிரி ஒரு பிரச்னையும் இல்லை. பைத்தியகாரத்தனமாக உள்ளது. இவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏன் இவ்வளவு கேவலமாக யோசிக்கிறார்கள் என தெரியவில்லை'' என்றார்.
மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, திமுக துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.