அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி தற்போதும் பிஸியான நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சிரஞ்சீவி. அப்போது முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அவர் பேசும்போது, தான் அப்படி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டபோது நாளடைவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகள் இருப்பது தெரிய வந்ததாகவும் உடனடியாக சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவை அகற்றப்பட்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த செய்தி சிரஞ்சீவி கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது போலவும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது போலவும் வெளியாக துவங்கின. சிரஞ்சீவியின் கவனத்திற்கு இது வந்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாகத்தான், அப்படி ஒரு மருத்துவ பரிசோதனையை நான் செய்து கொண்டபோது முன்கூட்டியே புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளை கண்டறிய முடிந்தது என்றும் கொஞ்சம் நாட்கள் தாமதம் ஆகியிருந்தால் அது புற்றுநோயாக மாறி இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும் என்பதையும் உணர்த்தும் விதமாகத்தான் நான் பேசினேன். ஆனால் நானே புற்றுநோயால் பாதிக்கப்பட்டது போன்று செய்திகள் தவறாக வெளியாகி வருகின்றன. தயவுசெய்து இப்படி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் சிரஞ்சீவி.