பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கடந்த ஜூன் இரண்டாம் தேதி முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவான ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் திரைக்கு வந்தது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் உலக அளவில் 4.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படம் முதல் நாளில் 3.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 5.5 கோடி வசூலித்துள்ளது.
அந்த வகையில் ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை விட ஆதியின் வீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு கோடி அதிகமாக வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முந்தைய நாட்களை விட இன்று இந்த இரண்டு படங்களுமே அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.