பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி மேனன், பசுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனன், தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடித்து வரும் அனுபவம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த தங்கலான் படத்தை பொருத்தவரை விக்ரம் இல்லாமல் இந்த பயணத்தை என்னால் நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் எனக்கு உதவியாக இருந்துள்ளார். தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருமே நன்றாக நடிக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர். அதோடு தன்னுடன் நடிப்பவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி எப்போதும் கலகலப்பாக காமெடியாக பேசிக் கொண்டிருப்பார் விக்ரம் என்று கூறி இருக்கும் மாளவிகா மோகனன், விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைந்ததும் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.