பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி இனி அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம். இதற்காக ஒற்றை சாளர முறையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் மட்டுமே முறையான அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெறலாம். இனிமேல், ராஜாஜி மண்டபம், தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச்சின்னங்கள், வள்ளுவர் கோட்டம், அரசு மனநலக்காப்பகம், மெரினா கடற்கரை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.