இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்றது. 1500 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் ‛தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமியும், ‛தயாரிப்பாளர் உரிமை காக்கும் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு மன்னனும் போட்டியிடுகின்றனர். இரு அணிகள் சார்பிலும் துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இரு அணிகளும் வெளியூர் மற்றும் உள்ளூர் உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஓட்டு கேட்டனர். மன்னன் அணி வெள்ளி குங்கும சிமில், 1000 ரூபாய் மதிப்புள்ள டிபன் பாக்ஸ் பரிசு கொடுத்தனர் என்றால், முரளி அணியினர், செமயாக கவனித்து விட்டனர். வெளியூர் உறுப்பினர்களுக்கு தரமணி அடையார் பகுதிகளில் இருக்கும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, நேற்று ராதா பார்க் ஓட்டலில் நடந்த சந்திப்பில் ஐ.டி கார்டுடன் வந்த உறுப்பினர்களுக்கு தலா ரூ.25,000 ரொக்கமாக கவரில் போட்டுக் கொடுத்துள்ளனர்.
இந்த பணத்தை வாங்க, பல கோடி போட்டு படத்தை எடுத்த தயாரிபாளர்கள் சிலர் நேற்று அடித்து கொண்டதை வேடிக்கையாக மற்ற சில தயாரிப்பாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் முரளி ராமசாமி, நலிந்த மற்றும் சிறு தயாரிப்பாளர்களுக்கு வீடு மனைக்கு இடம் வாங்கி வைத்துள்ளார். அதை வீடாக நான் மாற்றி தர ஏற்பாடு செய்வேன் என்றும் பேசினார். இன்று நடந்த தேர்தலில், பண பட்டுவாடா மற்றும் வாக்குறுதிகளை பார்த்தால் முரளி அணி தான் வெற்றி பெறும் என்று தெரிகிறது. நாளை காலை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்று நாளை தெரிந்துவிடும்.