மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் விநாயகன். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் வித்தியாசமான வசன உச்சரிப்புடன் தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது மனைவியிடம் இருந்து தான் பிரிந்து விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விநாயகன்.
இது குறித்து விநாயகன் அந்த வீடியோவில் கூறும்போது, “எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான அனைத்து திருமண உறவுகளும் சட்ட உறவுகளும் இந்த தருணத்தில் இருந்து முடிவுக்கு வருகின்றன” என்று கூறியுள்ளார். விநாயகனை பொறுத்தவரை, அவரது நடிப்பிற்காக பலராலும் பாராட்டப்பட்டாலும் பெரும்பாலும் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். கடந்து சில மாதங்களுக்கு முன்பு கூட பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் மரியாதை குறைவாக பேசி பின் அதற்காக மன்னிப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.