300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‛பத்து தல, 1947 ஆகஸ்ட் 16' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதையடுத்து தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் ‛கிரிமினல்' என்ற படத்தில் நடித்து வந்தார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, மதுரை கதைக்களத்தில் கிரைம் கலந்த படமாக உருவாகிறது. இதில் ஜனனி, தீப்தி, ரவீனா ஆகியோரும் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். கடந்த ஜன., 23ல் படப்பிடிப்பு மதுரையில் துவங்கியது. பின்னர் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதை கவுதம் கார்த்திக், தக்ஷிண மூர்த்தி ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுதொடர்பான போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து மற்ற பணிகளும் அடுத்தடுத்து துவங்க உள்ளன.