ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‛பத்து தல, 1947 ஆகஸ்ட் 16' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதையடுத்து தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் ‛கிரிமினல்' என்ற படத்தில் நடித்து வந்தார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, மதுரை கதைக்களத்தில் கிரைம் கலந்த படமாக உருவாகிறது. இதில் ஜனனி, தீப்தி, ரவீனா ஆகியோரும் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். கடந்த ஜன., 23ல் படப்பிடிப்பு மதுரையில் துவங்கியது. பின்னர் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதை கவுதம் கார்த்திக், தக்ஷிண மூர்த்தி ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுதொடர்பான போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து மற்ற பணிகளும் அடுத்தடுத்து துவங்க உள்ளன.