சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பெங்களூருவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரஜினி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினி, இந்த நாள் என்னை உருவாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன் . இறைவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அண்ணனுக்கு தங்கமழை
தன் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்த படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரஜினி கூறியுள்ளதாவது: என் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் கொண்டாடியது மகிழ்ச்சி. என்னை இன்று இந்தளவு ஆளாக்கிய, இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன். நன்றி இறைவனே.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.





