ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர். டப்பிங் கலைஞரான இவர் சினிமாவில் குணச்சித்திரம், காமெடி, வில்லன் என்று பல்வேறு கேரக்டர்களில் நடித்தார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடியவர் என்ற பெயர் எம்.எஸ்.பாஸ்கருக்கு உண்டு. இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், தற்போது 'அக்கரன்' என்ற படத்தில் முதல்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் கபாலி விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடிக்கின்றனர். குன்றம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரிக்கிறார். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஆர்.ஹரி இசை அமைக்கிறார். அருண் கே.பிரசாத் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குன் அருண் பிரசாத் கூறியதாவது: நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிரியதர்ஷினியை, அரசியல் செல்வாக்கு மிகுந்த நமோ நாராயணனின் ஆட்கள் கடத்திச் சென்று கொன்றுவிடுகின்றனர். அந்த பழியை எம்.எஸ்.பாஸ்கர் மீதே சுமத்துகிறார்கள். அவர்களை எம்.எஸ்.பாஸ்கர் எப்படி தந்திரமாகப் பழிவாங்கி, இறுதியில் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது கதை. மதுரை பின்னணியில் கதை நடக்கிறது. வரும் மார்ச் மாதம் ஓடிடியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அக்கரன் என்றால், யாராலும் அழிக்க முடியாதவன் என்று பொருள். என்றார்.