ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம்தான் வெளியானது. தற்போதுதான் முதல் கட்டப் பதிவு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்திற்கான அறிவிப்பு வெளியான அன்றே இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
கேரளாவில் விஜய் படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அங்குள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் இப்போதே 'லியோ' படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளார்கள். கண்ணூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஐந்து தியேட்டர்களில் அதற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது பற்றிய போஸ்டரையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
பட அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே ஒரு படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகியிருப்பது, அதுவும் கேரளாவில் ஆரம்பமாகியிருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். படம் வெளியாக இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் என்னென்ன செய்வார்களோ ?.