ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் இந்த படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியாகியுள்ளது என்றாலும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், பிரித்விராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் நிலையில், காந்தாரா படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில், விஜய் 67வது படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன்னைக் அப்படத்தில் நடிப்பதற்கு யாரும் அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விஜய் 67வது படத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என்று தெரியவந்துள்ளது.