300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் விமல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதற்கு பதலளிக்கும் வகையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விமல் மதுவுக்கு அடிமையாகிவிட்டார் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது: எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. அப்படி எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இப்போதுகூட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன். நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டதால் வீட்டிலேயே சிகிச்சை நடப்பதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இது சிரிப்பாகவும், காமெடியாகவும் இருக்கிறது. வேண்டாத விஷக்கிருமிகள் எனக்கு எதிராக இதை செய்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும். இந்த மாதிரியான சின்னபிள்ளைத்தனமாக வேலையை விட்டுவிட்டு உழைக்கிற வேலைய பாருங்கள், வாழவிடுங்கள், நீங்களும் வாழுங்கள். காயப்படுத்த நினைக்காதீர்கள்.
இவ்வாறு விமல் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.