மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
‛கனெக்ட்' படத்திற்கு பிறகு ஜவான், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள் நயன்தாரா. அப்போது அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து அனைத்து மக்களுக்கும் தான் கொண்டு சென்ற பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கணவருடன் திரும்பி இருக்கிறார் நயன்தாரா. இதுகுறித்து வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.