ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மாஸ்டர் படத்தைக் அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. என்றாலும் அது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அந்த பூஜையில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே பல நடிகர்களின் பெயர்கள் வெளியான போதும், அப்போதெல்லாம் பிரியா ஆனந்தின் பெயர் வெளியாகவில்லை. ஆனால் இப்போது அவர் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் அவரும் விஜய் 67 வது படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரியா ஆனந்த் இணைந்தால் இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். தற்போது தமிழில் அந்தகன், சுமோ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த் .