சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மாஸ்டர் படத்தைக் அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. என்றாலும் அது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அந்த பூஜையில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே பல நடிகர்களின் பெயர்கள் வெளியான போதும், அப்போதெல்லாம் பிரியா ஆனந்தின் பெயர் வெளியாகவில்லை. ஆனால் இப்போது அவர் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் அவரும் விஜய் 67 வது படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரியா ஆனந்த் இணைந்தால் இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். தற்போது தமிழில் அந்தகன், சுமோ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த் .