துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ராட்சசன் படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடித்தவர் சரவணன். அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹீரோவாகி இருக்கிறார். குற்றப்பின்னணி என்ற படத்தில் ஹீரோவாகும் அவருக்கு தீபாளி, தாட்சாயிணி என்ற இரு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கிறார்கள்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வாங்க வாங்க, ஐ.ஆர்.8 போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ளார். சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் இஸ்மாயில் கூறியதாவது: தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும், பார்த்தும் திகைக்கக்கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே குற்றப்பின்னணி. என்கிறார்.