புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற கதையை தழுவி உருவாகும் படம் ரத்தசாட்சி. இந்த படத்தை வசந்தபாலன் உதவியாளர் ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாவீத் ரியாஸ் இசை அமைத்துள்ளார். கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரித்துள்ள இந்த படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக நிகழ்வில் படம் பற்றி இயக்குனர் ரபிக் இஸ்மாயில் கூறியதாவது: ஜெயமோகன் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக்க ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.
இந்த படத்தின் கதையும், வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் கதையும் ஒன்று என்கிறார்கள். அது தவறானது, ஒரு போலீஸ் அதிகாரிக்கும், ஒரு நக்சலைட்டுக்கும் இடையிலான கதை என்கிற ஒரு விஷயம் தவிர மற்ற எல்லாமே தனித்தனியானது. இந்த கதையின் களமும், கருத்தும் வேறு, அந்தக் கதையின் களமும் கருத்தும் வேறு.
ஜெயமோகனின் 'கைதிகள்' சிறுகதை ஒரு திரைப்படத்திற்கு போதுமான சம்பவங்களை கொண்டிருக்கவில்லை. அதனால் மேலும் சில கதாபாத்திரங்களையும், அவர்களுக்குரிய சம்பவங்களையும் சேர்த்து இந்த படத்தை உருவாக்கி உள்ளேன். ஆயுதத்தால் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது, என்று அமைதியை பேசுகிற படம். ரத்தசாட்சி என்று டைட்டில் வைத்திருந்தாலும் படம் பேசுவது அமைதி புரட்சியைத்தான்.. என்றார்.