பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அப்படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அவர் இயக்கியுள்ள 'கோல்டு' படம் அடுத்த வாரம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
ஓணம் பண்டிகையின் போதே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தைத் தள்ளி வைத்திருந்தார்கள். நயன்தாரா தமிழில் நம்பர் 1 நடிகையாக இருப்பதால் படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. கேரளாவில் கால்பந்து போட்டிகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. பலரும் தற்போது உலகக் கால்பந்து போட்டிகளில் பிஸியாக இருப்பதால் மலையாள ரசிகர்கள் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது படம் வெளியானால்தான் தெரியும்.