விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி அவரது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரவுடி பிக்கர்ஸ் நிறுவனம். இந்த படத்திற்கு தற்காலிகமாக என்டி81 என்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது நயன்தாரா நடிக்கும் 81வது படம் என்று பொருள். இந்த படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய ஆர்.எஸ்.செந்தில்குமார் இயக்குகிறார்.
இதுகுறித்து விக்னேஷ்சிவன் விடுதுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது: நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான படங்களை கொடுத்த துரை செந்தில்குமாருடன் இணைந்ததில் மகிழ்ச்சி. நயன்தாராவின் 81வது படத்தின் கதையை அவர் கூறியபோது பார்வையாளர்களுக்கு பிடித்த பல அம்சங்கள் அதில் இருந்தது. விரைவில் இந்த படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிக்கப்படும். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் ஒரு யானையின் முகத்தில் நயன்தாராவின் கை ஆதரவாக தடவிக் கொடுப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தபோது இதில் நயன்தாரா யானையை பராமரிப்பவராக நடிப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் வாழ்கை பற்றிய படமாக இருக்கலாம் என்று தெரிகிறது. யானைகளின் பாதுகாப்பிற்காக போராடும் ஒரு அனிமல் லவ்வரின் கதை என்றும் கூறப்படுகிறது.