மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காமெடி நடிகர்களான யோகி பாபு சின்னி ஜெயந்த் உள்ளிட்ட 4 நகைச்சுவை நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடரந்து செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு, தான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன் என்றும் விரைவில் கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: நடிகர் ஷாருக்கானுடன் நான் இரண்டாவது படம் நடித்து வருகிறேன். அவர் நல்ல நடிகர். அதற்கு இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்குவேன். மறைந்த நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர். அப்துல் கலாம் போன்றவருடன் பயணம் செய்தவர். நான் இயக்குனர் சொல்வதை மட்டும் தான் நடித்து வருகிறேன்.
நான் கதாநாயகனை போல் முகபாவனை இல்லாதவன் என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மண்டேலா போன்ற படங்கள் கதாநாயகன்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல. அதனால் நான் இது மாதிரியான படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறேன்.காமெடியனாகவும், கதாநாயகனாகவும் பார்ப்பது ஒரே முகம் தான் அது மக்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு கூறினார்.