மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கன்னட திரையுலகிற்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான ‛காந்தாரா' திரைப்படம். இந்தப்படத்தை இயக்குனர் ரிஷாப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். வழக்கமான ஒரு சராசரி கன்னட படம் என்கிற அளவிலேயே வெளியான இந்தப்படம், மேக்கிங் மற்றும் அதில் சொல்லப்பட்ட கதையம்சம் ஆகியவற்றால் தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில் இந்த படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, “தெலுங்கில் எனது தயாரிப்பில் ரிஷாப் ஷெட்டி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார். அதற்கேற்ற கதையும் காலமும் கனிந்து வரும்போது அதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் ரிஷாப் ஷெட்டி தனது அடுத்த படம் பற்றி கூறும்போது, அது என் கையில் இல்லை. கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.