மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. இதற்காக நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். அதோடு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, ஸ்ரீமன், நாசர், லதா, விமல், கருணாஸ், மனோபாலா, தளபதி தினேஷ், விக்னேஷ், வாசு தேவன் ஆகியோர் இணைந்து 2 லட்சம் ரூபாய் வழங்கினர். இந்த தொகையை கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தில் நடந்த விழாவில் கார்த்தி இந்த பரிசுகளை வழங்கினார். இதில் பூச்சி முருகன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெளியூரில் இருக்கும் கலைஞர்களுக்கு பரிசு பொருட்கள் அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.