300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா. பெங்களூரை சேர்ந்த இவர் கேளடி கண்மணி தொடரின் மூலம் அறிமுகமானார். தற்போது செவ்வந்தி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் செல்லம்மா தொடரில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் அர்ணவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் திவ்யா நேற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கர்ப்பிணியான தன்னை கணவன் அடித்து உதைத்தால் காயம் அடைந்ததாக தெரிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தது. போரூர் மகளிர் காவல் நிலைய போலீசார் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் தன்னை அடித்ததால் எப்போது வேண்டுமானாலும் தனது கரு கலையலாம் என்றும் பேசி திவ்யா வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: சமீபத்தில் தான் எனக்கும், அர்ணவ்விற்கும் திருமணம் முடிந்தது. அவர் தற்போது 'செல்லம்மா' தொடரில் நடித்து வருகிறார். ஒரே தொடரில் நடித்து வந்த நாங்கள், ஒரே வீட்டில் வசித்து வந்தோம். 2 வருடத்துக்கு முன்பு நாங்கள் ஒரு வீடு வாங்கினோம். அந்த கடனை எல்லாம் நான் தான் கட்டினேன். 'கல்யாணப்பரிசு' தொடருக்கு பிறகு கொரோனா காலத்தில் அர்ணவ்க்கு எந்த ஒரு தொடரும் கைவசம் இல்லை. நான் தான் 'மகராசி' தொடரை முடித்துவிட்டு வங்கி கடனை எல்லாம் கட்டினேன். அர்ணவ் தனியாக வாங்கி இருந்த கடனையும் நான்தான் கட்டினேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் குழந்தையை போல் நான் பார்த்துக்கொண்டேன்.
ஆனால் என் கணவர் என்னை அடித்ததால் நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டது. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்து விட்டேன். தற்போது நான் ஆஸ்பத்திரியில் உள்ளேன். டாக்டர்கள் எப்போது வேண்டுமானாலும் எனது கரு கலையலாம் என கூறுகின்றனர். எனது கணவர் எனக்கு வேண்டும். எனது குழந்தையை காப்பாற்ற வேண்டும். எனக்காக அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் வீடியோவில் கண்ணீர் மல்க பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் அர்ணவ், “என் மனைவி அவள் கருவை கலைக்க நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அவருக்கு ஏற்கெனவே திருமணமானது எனக்கு தெரியும். ஆனால் விவாகரத்து செய்து விட்டதாக என்னிடம் பொய் சொல்லி என்னை திருமணம் செய்து கொண்டார்” என்று ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இரு புகார்களையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.