பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தமிழில் ‛வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு சண்டை காட்சிகள் தவிர அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதோடு இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்களுக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதை மீண்டும் வலியுறுத்தி இப்படம் கண்டிப்பாக 2023 ஜனவரியில் பொங்கலுக்கு திரைக்கு வந்துவிடும் என்று ஒரு செய்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதோடு அன்றைய தினம் தமிழகத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடப்படும் அதேநாள் தெலுங்கில் சங்கராந்தி பண்டிகை என்பதால் தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படமும் திரைக்கு வருகிறது. அதனால் விஜய்யின் வாரிசு படமும், பிரபாஸின் ஆதி புருசும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.