ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்கள் பக்கம் அதிகம் வரவில்லை. அவருக்கு பழையபடி தோல் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துள்ளார் என்று டோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள். ஓய்வெடுத்து வருவதால் சமூக வலைத்தளங்கள் பக்கமும் வரவில்லை என்றார்கள்.
ஆனால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள பான் இந்தியா படமான 'ஷாகுந்தலம்' படம் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் அந்தப் படம் பற்றிய பதிவுகளை தனது தளங்களில் பதிவு செய்ய மீண்டும் வந்துள்ளார்.
'ஷாகுந்தலம்' படத்தின் அப்டேட்டுகளைப் பற்றி பலரும் பதிவிட்டுள்ளதற்கு நன்றி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார். இருப்பினும் தனது உடல்நலன் குறித்து அவர் எந்தவிதமான பதிவையும் இடவில்லை. அடிக்கடி செல்பி புகைப்படங்களைப் பதிவிடும் சமந்தா மீண்டும் அப்படிப் பதிவிடும் வரை அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.