100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! |
காதல் பறவைகளாய் இருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் வெளிநாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு இன்று(செப்.,18) பிறந்தநாள். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு வரும் கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாக துபாயில் குடும்பத்தினர் உடன் கொண்டாடி உள்ளார் நயன்தாரா. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா முன் மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதனுடன், ‛‛குடும்பத்தினரின் தூய்மையான அன்பால் நிறைந்த பிறந்தநாளாக எனக்கு இன்று அமைந்தது. என் தங்கமான மனைவி தந்த இன்ப ஆச்சரியமான பரிசு. குடும்பத்தினர் உடன் புர்ஜ் கலிபா முன் பிறந்தநாளை கொண்டாடினேன். இதைவிட சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட முடியாது. இறைவன் ஆசீர்வாதத்தால் அவர் தந்த அனைத்து அழகான தருணங்களுக்காக நன்றி சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.