‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
காதல் பறவைகளாய் இருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் வெளிநாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு இன்று(செப்.,18) பிறந்தநாள். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு வரும் கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாக துபாயில் குடும்பத்தினர் உடன் கொண்டாடி உள்ளார் நயன்தாரா. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா முன் மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதனுடன், ‛‛குடும்பத்தினரின் தூய்மையான அன்பால் நிறைந்த பிறந்தநாளாக எனக்கு இன்று அமைந்தது. என் தங்கமான மனைவி தந்த இன்ப ஆச்சரியமான பரிசு. குடும்பத்தினர் உடன் புர்ஜ் கலிபா முன் பிறந்தநாளை கொண்டாடினேன். இதைவிட சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட முடியாது. இறைவன் ஆசீர்வாதத்தால் அவர் தந்த அனைத்து அழகான தருணங்களுக்காக நன்றி சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.