காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
காதல் பறவைகளாய் இருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் வெளிநாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு இன்று(செப்.,18) பிறந்தநாள். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு வரும் கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாக துபாயில் குடும்பத்தினர் உடன் கொண்டாடி உள்ளார் நயன்தாரா. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா முன் மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதனுடன், ‛‛குடும்பத்தினரின் தூய்மையான அன்பால் நிறைந்த பிறந்தநாளாக எனக்கு இன்று அமைந்தது. என் தங்கமான மனைவி தந்த இன்ப ஆச்சரியமான பரிசு. குடும்பத்தினர் உடன் புர்ஜ் கலிபா முன் பிறந்தநாளை கொண்டாடினேன். இதைவிட சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட முடியாது. இறைவன் ஆசீர்வாதத்தால் அவர் தந்த அனைத்து அழகான தருணங்களுக்காக நன்றி சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.