போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61 வது படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜித் அல்லாத மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பங்காங்கில் நடைபெற உள்ளது. அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பைக்கில் லடாக்கில் சுற்று பயணம் செய்து வரும் அஜித்குமார், 17,000 அடி உயரத்தில் இருக்கும் புத்தர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதையடுத்து தற்போது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் அஜித் குமார். அவர் அங்கு தரிசனம் செய்யும் காட்சி, நந்தியின் வாயில் இருந்து வரும் தீர்த்த நீரை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.