பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61 வது படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜித் அல்லாத மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பங்காங்கில் நடைபெற உள்ளது. அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பைக்கில் லடாக்கில் சுற்று பயணம் செய்து வரும் அஜித்குமார், 17,000 அடி உயரத்தில் இருக்கும் புத்தர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதையடுத்து தற்போது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் அஜித் குமார். அவர் அங்கு தரிசனம் செய்யும் காட்சி, நந்தியின் வாயில் இருந்து வரும் தீர்த்த நீரை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.