30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
தமிழில் மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினா. தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடிக்கிறார். தற்போது நிவேதா தாமஸ் உடன் இணைந்து இவர் சாகினி தாகினி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடம் நாளை(செப்.,16) வெளியாக உள்ளது. இதற்காக பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டார் ரெஜினா. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்களையும், நூடுல்ஸ் குறித்து இரட்டை அர்த்த காமெடி வசனம் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது முதல் உதட்டு முத்தம் அனுபவம் குறித்து பேசி உள்ளார் ரெஜினா. அவர் கூறுகையில், ‛‛ஒரு சமயம் ஒரு பெண் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அறைந்திருப்பேன்'' என்கிறார் ரெஜினா.