புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினா. தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடிக்கிறார். தற்போது நிவேதா தாமஸ் உடன் இணைந்து இவர் சாகினி தாகினி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடம் நாளை(செப்.,16) வெளியாக உள்ளது. இதற்காக பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டார் ரெஜினா. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்களையும், நூடுல்ஸ் குறித்து இரட்டை அர்த்த காமெடி வசனம் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது முதல் உதட்டு முத்தம் அனுபவம் குறித்து பேசி உள்ளார் ரெஜினா. அவர் கூறுகையில், ‛‛ஒரு சமயம் ஒரு பெண் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அறைந்திருப்பேன்'' என்கிறார் ரெஜினா.