''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி |
‛விருமன்' இசை வெளியீட்டிற்காக மதுரை வந்த நடிகர் கார்த்தி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்.
முத்தையாக இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‛விருமன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கோலாகலமாக நடந்தது. இரவு 11 மணிக்கு வரை இந்த இசை வெளியீடு நீடித்தது. இந்நிலையில் கார்த்தி இன்று காலை ஆறு மணி அளவில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு கோபுரம் வழியாக சென்று அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார்.
கார்த்தி கூறுகையில், ‛‛பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது'' என்றும் தெரிவித்தார்.