25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
‛விருமன்' இசை வெளியீட்டிற்காக மதுரை வந்த நடிகர் கார்த்தி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்.
முத்தையாக இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‛விருமன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கோலாகலமாக நடந்தது. இரவு 11 மணிக்கு வரை இந்த இசை வெளியீடு நீடித்தது. இந்நிலையில் கார்த்தி இன்று காலை ஆறு மணி அளவில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு கோபுரம் வழியாக சென்று அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார்.
கார்த்தி கூறுகையில், ‛‛பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது'' என்றும் தெரிவித்தார்.