அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா |
பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கடுவா திரைப்படம். இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன், கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்... இதற்கு முன்னதாக தான் இயக்கிய லூசிபர் படத்தின் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்கு விவேக் ஓபராயை அழைத்து வந்து வில்லனாக்கியவர் பிரித்விராஜ் தான். வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் விவேக் ஓபராய் பேசும்போது, “இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பயங்கரமாக இருந்தது. பிரித்விராஜை திறமையின் பவர் ஹவுஸ் என்று சொல்வேன். அவர் ஆடுகிறார், பாடுகிறார், நடிக்கிறார், படம் இயக்குகிறார், தயாரிப்பாளராக இருக்கிறார்.. என்ன வேலை தான் அவர் செய்யவில்லை..! படப்பிடிப்பில் எங்களை எல்லாம் மீறி ஏதாவது ஒரு விஷயம் செய்து அசத்தி விடுவார். அதுதான் எங்களை பயப்படுத்தும். அவ்வளவு ஏன் பெண் வேடம் போட்டால் சம்யுக்தாவின் கதாபாத்திரத்தை கூட அவரை நடித்து விடுவார்.. அவரை கேரளாவின் கமல்ஹாசன் என்று தான் நான் சொல்வேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.