ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‛புஷ்பா' படம் வெற்றி பெற்றது. இதில் ஸ்ரீவள்ளி என்ற வேடத்தில் நடித்து அசத்தினார் ராஷ்மிகா. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.
இதனிடையே ‛புஷ்பா 2'வில் ராஷ்மிகா இல்லை என்றும் அவர் கொல்லப்பட்டு விடுவார் என்பது போன்று கதை உள்ளதாக செய்திகள் பரவின. இதை மறுத்துள்ள இந்தபட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ‛‛இன்னும் கதையே முழுதாக ரெடியாகவில்லை. அதற்குள் இஷ்டத்திற்கு ஆளாளுக்கு ஒரு கதையை பரப்பி விடுகின்றனர். இவை அனைத்துமே தவறானவை. நிச்சயம் ராஷ்மிகா புஷ்பா 2விலும் தொடருவார்'' என்றார்.