பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம், இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல திரையரங்குகளில் 50 நாட்களுக்கும் குறையாமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதுடன் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற மிகப்பெரிய சாதனை இலக்கையும் இந்த படம் கடந்தது. இந்தப்படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அடுத்ததாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
டைசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். லூசிபர், புரோ டாடி ஆகிய படங்களை தொடர்ந்து பிரித்விராஜ் இயக்கும் மூன்றாவது படம் இது. லூசிபர் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். கேஜிஎப் 2 படத்தை மலையாளத்தில் பிரித்திவிராஜ் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.