ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம், இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல திரையரங்குகளில் 50 நாட்களுக்கும் குறையாமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதுடன் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற மிகப்பெரிய சாதனை இலக்கையும் இந்த படம் கடந்தது. இந்தப்படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அடுத்ததாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
டைசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். லூசிபர், புரோ டாடி ஆகிய படங்களை தொடர்ந்து பிரித்விராஜ் இயக்கும் மூன்றாவது படம் இது. லூசிபர் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். கேஜிஎப் 2 படத்தை மலையாளத்தில் பிரித்திவிராஜ் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.