மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னை: நிலம் வாங்கித் தருவதாக, நடிகர் சூரியிடம் பண மோசடி செய்தது தொடர்பாக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரமேஷ் குடவாலாவின் வாக்குமூலத்தை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் ரமேஷ் குடவாலா. இவர், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு விஷாலின் தந்தை. இவரும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் நிலம் வாங்கித் தருவதாக 2.70 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சூரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், துணை கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும்; அதை, கூடுதல் கமிஷனர் கண்காணிக்க வேண்டும்; விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கெடு விதித்தது.
இதையடுத்து, புகார்தாரரான சூரியிடம் பல மணி நேரம் விசாரித்து, 110 கேள்விகள் கேட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, ரமேஷ் குடவாலாவுக்கு, 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, தன் மகனும், நடிகருமான விஷால் விஷ்ணுவுடன், ரமேஷ் குடவாலா, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் முன் ஆஜரானார். பண மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலிடமும் விசாரணைநடந்ததாக கூறப்படுகிறது.