சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சினிமாவில் ஹீரோ, வில்லன், கேரக்டர் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் மன்சூரலிகான் அவ்வப்போது இயக்குனர், தயாரிப்பாளர் என்றும் அவதரிப்பார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் அப்போது ஏதாவது ஒரு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர், பல தேர்தல்களில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். இந்தநிலையில், தன்னிடம் நிலம் வாங்கித்தருவதாக சொல்லி வாசைக்கனி என்ற நபர் ரூ. 50 லட்சம் வாங்கி அதை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ள மன்சூரலிகான், அந்த பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




