கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன . இப்படத்தின் இரண்டாம் பாகம் 1,100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது மூன்றாம் பக்கத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தின் பணிகளை தொடங்க உள்ளார். இருப்பினும் இதில் நடிக்க ஹாலிவுட் நடிகர்கள் சிலரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ராஜமவுலியின் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.