அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நயன்தாரா தயாரித்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இருவிதமான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக எல்லோருக்கும் திருப்பதியை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி சொல்லவும், விரைவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஆசி பெறவும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
இருவரும் சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபா தரிசனம் முடிந்த பிறகு அங்குள்ள மண்டபத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் தொல்லை இல்லாததால் அவர்கள் பலமுறை கோவிலை சுற்றி வந்துள்ளனர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக நயன்தாரா, பிரபு தேவாவை காதலித்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அதன் பிறகு இந்து மதத்தின் தீவிர பக்தையாக மாறி இருக்கிறார். திருப்பதிக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்து பெண்ணாக வாழ்வதில் அவர் முழு திருப்தியும், அமைதியும் அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. என்கிறார்கள்.