மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், சமூக வலைதளங்களில் பிரபலமான நபராக வலம் வருகிறார். தொலைக்காட்சியில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், இன்ஸ்டாகிராமில் காட்டிய கவர்ச்சியின் காரணமாக சினிமா வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது கமல் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படம் உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஷிவானிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு ரசிகர் ஷிவாணிக்கு கிப்ட் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெர்ஷட்லி பாரத் என்ற ரசிகர், ஷிவானியின் புகைப்படத்தை வரைந்து பிரேம் செய்து அதில், ஷிவானி குறித்து கவிதை ஒன்றி எழுதி கிப்ட்டாக வழங்கியுள்ளார். இதை பார்த்து இன்ப அதிர்ச்சியடையும் ஷிவானி இது நீங்க எழுதிய கவிதையா என்று கேட்டு, அந்த கவிதையை அவரையே படிக்க சொல்கிறார். அந்த ரசிகர் அதை பாடலாகவே பாடிவிட, ஷிவானி அந்த ரசிகருக்கு நன்றி சொல்கிறார். கிப்டை வாங்கிக் கொண்டு கவிதையை கேட்டு வெட்கத்துடன் நிற்கும் ஷிவாணியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.