அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் இதே நாளில் பிப்ரவரி 26, 2010ம் ஆண்டு வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கிளைமாக்சில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால், அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாயா சேசவே' அவர்தான் கதாநாயகி. தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தை தெலுங்கில் சமந்தா ஏற்று நடித்திருந்தார். தெலுங்கில் முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியையும், நல்லதொரு அறிமுகத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால், சமந்தா முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான படம் 'மாஸ்கோவின் காவிரி'. சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் 'ஏ மாயா சேசவே' அவருடைய முதல் கதாநாயகிப் படமாக அமைந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கில் பல வெற்றிகளைப் பெற்றார். தனது முதல் பட கதாநாயகனாக நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் அவரை விட்டுப் பிரிந்தார்.
திரையுலகில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ள குறித்து சமந்தா, “திரையுலகிற்குள் வந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகிறது. லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என 12 வருட காலமாக இருக்கும் ஈடு இணையில்லா தருணம் இது. உலகின் சிறப்பான, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்,” என சமூக வலைத்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.