வில்லனாக மாறுவாரா விக்ரம்பிரபு | ஒரே நேரத்தில் ஹிந்தி, மலையாளத்தில் தயாராகும் 'திரிஷ்யம் 3' ; துவங்கும் தேதி ரிலீஸ் தேதி இரண்டும் ஒன்றே | ராஜமவுலி பட ஈயை காப்பி அடித்ததாக மலையாள படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் | போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? | விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது! | அடுத்த மாதத்தில் 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய விருந்து! ஆர். ஜே .பாலாஜி வெளியிட்ட தகவல் | ஒரே நாளில் முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் இதே நாளில் பிப்ரவரி 26, 2010ம் ஆண்டு வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கிளைமாக்சில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால், அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாயா சேசவே' அவர்தான் கதாநாயகி. தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தை தெலுங்கில் சமந்தா ஏற்று நடித்திருந்தார். தெலுங்கில் முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியையும், நல்லதொரு அறிமுகத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால், சமந்தா முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான படம் 'மாஸ்கோவின் காவிரி'. சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் 'ஏ மாயா சேசவே' அவருடைய முதல் கதாநாயகிப் படமாக அமைந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கில் பல வெற்றிகளைப் பெற்றார். தனது முதல் பட கதாநாயகனாக நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் அவரை விட்டுப் பிரிந்தார்.
திரையுலகில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ள குறித்து சமந்தா, “திரையுலகிற்குள் வந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகிறது. லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என 12 வருட காலமாக இருக்கும் ஈடு இணையில்லா தருணம் இது. உலகின் சிறப்பான, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்,” என சமூக வலைத்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.