நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛அகிலன்' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் தூத்துக்குடியிலும், சென்னை காசிமேட்டிலும் படமாக்கி வந்தனர்.
இந்த படத்தில் போலீசாக சிராக் ஜானி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛தமிழில் நான் போலீஸ் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் என்னுடைய குஜராத்தி படமான ஜி படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தேன். அதில் நான் கதாநாயகனாக நடித்திருந்தேன். ஆனால், அகிலன் படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரம் என்பதால் வழக்கமான போலீஸ் கேரக்டர் அல்லாமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன்,' என்றார்.