தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில் மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் பிப்.,27ல் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அதன்பின்னர் ஓட்டுகள் எண்ணப்படும். இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடப்பாக இருந்த தேர்தல், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள சத்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.