ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில் மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் பிப்.,27ல் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அதன்பின்னர் ஓட்டுகள் எண்ணப்படும். இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடப்பாக இருந்த தேர்தல், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள சத்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.