மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில் மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் பிப்.,27ல் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அதன்பின்னர் ஓட்டுகள் எண்ணப்படும். இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடப்பாக இருந்த தேர்தல், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள சத்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.