துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி |
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது பான்-இந்தியா நாயகனாக மாறிவிட்டார். 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் 'சலார்'. இப்படம் ஸ்ருதிஹாசனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி நேற்று தன்னுடைய 37வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றியும் அவரது உணவு உபசரிப்பு பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார்.
“சலார்' படத்தின் கதை அற்புதமானது, அதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். இயக்குனர் பிரஷாந்த்தின் இயக்கம் வித்தியாசமான பார்வை கொண்டது.
பிரபாஸ் மிகவும் அற்புதமான மனிதர். அடுத்து அவர் ஒரு சிறந்த சாப்பாட்டுப் பிரியர். நான் பார்த்ததிலேயே இந்த அளவிற்கு சாப்பாட்டின் மீது பாசம் கொண்டவர் இவர்தான். தினமும் மற்றவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று விரும்புபவர். உணவு மூலம் அன்பைப் பரிமாறுபவர். அவரது சாப்பாட்டு முறை நார்மலான ஒன்று அல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.