அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் நீ சுடத்தான் வந்தியா. இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார். ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்தில் இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார். இப்படம் சென்சாரில் சிக்கி படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன.
இயக்குனர் கே.துரைராஜ் கூறியதாவது: இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம். முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினோம். இம்மாதம் டிசம்பர் 31 இறுதியில் இப்படம் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் இத்திரைப்படம் இருக்கும் என்றார்.