நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
சமூக வலைத்தளங்களில் ஒரு அடிப்படை மரியாதை கூட இல்லாமல் பலர் செயல்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளை 'டிரோல்' செய்பவர்களின் எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகம்.
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியெல்லாம் தரக்குறைவான விமர்சனங்களையும் பலர் முன்வைப்பதுண்டு. அப்படி ஒரு ரசிகர் சமந்தாவை 'டேக்' செய்து, “விவகாரத்து பெற்ற, இரண்டாம் தரமானவர், ஒரு ஜென்டில்மேனிடமிருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் பெற்றவர்” என 'டிரோல்' செய்திருந்தார்.
அந்த ரசிகரின் டுவீட்டை ரிடுவீட் செய்த சமந்தா, “உங்கள் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிலடி கொடுத்திருந்தார். சமந்தா ரிடுவீட் செய்ததைத் தொடர்ந்து அந்த கணக்கு வைத்திருந்த நபர் உடனடியாக தன்னுடைய கணக்கை டெலிட் செய்துவிட்டார். டுவிட்டர் தளங்களில் இப்படித்தான் போலியான கணக்குகளை ஆரம்பித்து தரமற்ற முறையில் பலர் செயல்பட்டு வருகின்றனர்.