கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா. விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2019ல் தொடங்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான லலித்குமார் தயாரித்துள்ள இப்படம் எப்போது ரிலீசாகப்போகிறது என்று விக்ரமின் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோப்ராவை வெளியிட திட்டமிட்டிருப்பதாக லலித்குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.