ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடலசிரியாக வலம் வருபவர் விவேகா. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியுள்ள இவர், அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் முதன்முதலாக மலையாள படம் ஒன்றில் பாடல் எழுதியுள்ளார். பிரீசர் நம்பர் ஒன் என்கிற கிரைம் த்ரில்லர் படமான இது மலையாளத்தில் உருவானாலும் கூட இதிலும் தமிழில் தான் பாடல் எழுதியுள்ளார் விவேகா. காரணம் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் நடக்கும் போலீசாரின் புலன் விசாரணை காட்சிகளின் பின்னணியில் இடம் பெறும் பாடல் என்பதால் அதை தமிழிலேயே எழுதித்தர சொல்லிவிட்டார்களாம்.