கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் |
விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷனையும் கூட்டணி சேர்த்து மைக்கேல் என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். இந்தநிலையில் எனது குருவுடன் இணைந்து நடிப்பதில் சந்தோஷம் என அவருடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சந்தீப் கிஷன்.
இதுபற்றி சந்தீப் கிஷன் கூறும்போது, "கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அனேகமாக அவரிடம் மோசமாக பணியாற்றிய உதவி இயக்குனர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். இந்த திரையுலகில் எனக்கென ஒரு அடையாளம் கொடுத்தவர் அவர்தான். அதன்பிறகு தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடனேயே ஒரு படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.