ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
வட இந்தியாவில் 'யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்' ஆகிய புண்ணிய தலங்களுக்கு விஜயம் செய்யும் 'சர் தம் யாத்ரா' என்பது பிரபலமான ஒன்று.
நடிகை சமந்தா அந்த 'சர் தம் யாத்ரா'வை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் மேற்கொண்டார்.
தற்போது அந்த யாத்திரையை நிறைவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “ஒரு அற்புதமான யாத்திரை நிறைவு பெற்றது 'சர் தம் யாத்ரா'. ஹிமாலயா மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. மகாபாரதத்தைப் படித்த போது, இந்த உலகின் சொர்க்கமான கடவுள்களின் இருப்பிடமான அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் எதிர்பார்த்தது எல்லாம் நடந்துவிட்டது. எனது இதயத்தில் ஹிமாலயாவுக்கு எப்போதுமே சிறப்பான இடம் உண்டு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் சமந்தா வெளியில் சென்ற முதல் இடம் இது.