காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நடிகர் மம்முட்டி படங்களில் நடிப்பதை தாண்டி, தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகளை இயலாதவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் அறக்கட்டளை ஒன்றின் சார்பாக காது கேளாதவருக்கான கருவியை (ஹியரிங் எய்டு கருவி) அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் மம்முட்டி. அப்போது சில வருடங்களுக்கு முன்பு தனது படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார் மம்முட்டி.
கடந்த 2009ல் மலையாளத்தில் 'லவ்டு ஸ்பீக்கர்' என்கிற படத்தில் காது கேளாத மாற்றித்திறனாளியாக நடித்திருந்தார் மம்முட்டி. அந்த படத்தில் பெரும்பாலும் 'ஹியரிங் எய்டு' அணிந்து கொண்டுதான் மற்றவர்கள் பேசுவதை அவர் புரிந்து கொள்வார். அந்த சமயத்தில் படப்பிடிப்பில் நிஜமாகவே இதுபோன்று காது கேளாத மாற்றுத்திறனாளி தொழிலாளி ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்காக மம்முட்டி ஹியரிங் எய்டு ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அதை காதில் பொருத்தியதும் முதன் முதலாக சப்தத்தை கேட்டு உணர்ந்த அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்து போய் அந்த ஹியரிங் எய்டை கழட்டி தூக்கி வீசி விட்டாராம். இந்த நிகழ்வை கூறிய மம்முட்டி, “அத்தனை நாட்களாக சப்தம் எதையுமே கேட்டிராத அந்த நபருக்கு முதன்முதலாக அதை கேட்டபோது அதன் தாக்கத்தை அவரால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர் அதை கழட்டி வீசினார்” என்று கூறியுள்ளார்.




